Friday, June 26, 2009

அன்று மழை பெய்தது-6

காரணமில்லாமல் வரும் காதலில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
1.அவள் அழகாக இருக்கிறாள்
2.குழந்தை தனமான பேச்சு
3.நல்ல பொண்ணு
இத்தனை காரணம் போதாதா காதல் வருவதற்ககு?மணிசங்கருக்கு காதல் வந்தது.

காதலில் வெற்றி பெறுவதெற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன அதை மதித்து நடந்தாலே போதும் பாதி கிணறு தாண்டின மாதிரி.அவனும் அவற்றை மதித்தான்.

முதல்ல ரொம்ப ஃப்ரண்ட்லியா பழகனும்.அப்புறம் ரொம்ப கேர் எடுத்துக்கனும்.இத்தனை வருஷம் அப்பா அம்மா காட்டின பாசத்த ஆறு மாசத்துல நம்ம முறியடிக்கனும்.ஆனா அதுக்கு அவசியம் இல்ல ஏன்னா அவ அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க அதுனால அவங்க கூட அவளுக்கு அட்டாச்மென்ட் கம்மி தான்.இப்படி எத்தனயோ பேரு முயற்சி பண்ணி வெற்றி பெற்ற பாதையில் அவனும் பயணிக்க தொடங்கினான்.

இத்தனை வருடங்களாக அன்புக்கு ஏங்கிய மனது.மூன்றே மாதத்தில் அவளே காதலை வெளிப்படுத்தினாள். நேரம் காலம் கூடி வருகிறது.அவன் ஆனந்த கூத்தாடினான். எது நடந்தாலும் ஒரு காரணத்தோட தான் நடக்குங்ற அவனோட மனப்போக்கை அவள் மாற்றினாள்.அவளோடு இருக்கும் தருணங்கள் அவனுக்கே அவனை புதிதாய் அறிமுகப்படுத்தின.

இந்த நிமிஷம் அவளை நான் நெனைச்சிட்டு இருக்கேன்னு அவளுக்கு தெரியுமா?நானா இதெல்லாம் யோசிக்கிறேன்? இதெல்லாம் தான் இப்போ அவன் அடிக்கடி அவனா யோசிச்சு பாத்து அவனா சிரிச்சுக்குற விஷயங்கள்.காதலை புரிய வைத்ததால் ஹரிதாவுக்கு நன்றி ஹரிதாவை தந்ததால் காதலுக்கு நன்றி.
அவனோட ப்ராஜக்ட் மானேஜர் ரவிக்குமாரை மட்டும் அவன் வாழ்க்கையில் இருந்து தனியாக எடுத்து வைத்து விட்டு பார்த்தால் இது தான் சொர்க்கம்னு கூட அவன் சொல்லிடுவான்.எல்லாம் கூடி வர்ர மாதிரி இந்த ஆளும் எங்கயாவது போயிட மாட்டானான்னு அவனுக்கு ஒரு நப்பாசை.

ஹரிதா முன்னாடி அந்த ஆள் கிட்ட திட்டு வாங்க அவனுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனாஅவ இதெல்லாம் கண்டுக்கிற ரகம் இல்லை தான். நேரம் வரட்டும் இந்த ஆளுக்கு முதல்ல ஆப்பு வைக்கனும்.கழுதைக்கு வாக்கப்பட்டா பொதி சுமந்து தான் ஆகனுங்றது எவ்வளவு சரியா இருக்கு?
அடுத்த நாள் அலுவலகத்துக்கு போனவனுக்கு இன்ப அதிர்ச்சி.ப்ராஜக்ட் விஷயங்களை வேற ஒரு ஏஜன்ட் கிட்ட விற்க போயி கையும் களவுமா மாட்டிகிட்டார் ரவிக்குமார்.இந்த சந்தோஷத்தை பகிர்ந்துக்க ஹரிதா இல்லை.அவ சொந்த ஊருக்கு போயிருக்கா.நிஜமாகவே தனது அதிர்ஷ்டத்தை நினைத்து வியந்து கொண்டான்.புது மானேஜர் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்தார்.அரை மணி நேரத்தில் ஊழியர்கள் அனைவரையும் கான்பெரன்ஸ் ஹாலுக்கு அழைத்தார்.தனது அதிர்ஷ்டத்தின் மேல் மொத்த பாரத்தையும் போட்டு விட்டு மணிசங்கரும் அறைக்குள் நுழைந்தான்.அங்கே
புது மானேஜர் தாமோதரன் உட்கார்ந்திருந்தார்.

அவன் மண்டைக்குள் ஒரு குரல் கேட்டது"எல்லாத்துக்கும் நேரம் காலம் கூடி வரனும்".

Wednesday, June 24, 2009

அன்று மழை பெய்தது-5

போகும் போது இருந்த உற்சாகம் மகிழ்ச்சி எல்லாம் மறைந்து சோர்ந்து போய் வீடு திரும்பினான் மணிசங்கர்.ஹரிதாவையும் அவனையும் ஒரே குழுவில் வேறு போட்டுவிட்டார்கள்.காலையில நேரம் காலம் கூடி வந்திருச்சுனு சந்தோஷப்பட்டவன் சாயங்காலம் விதி வலியதுனு நொந்து போயிருந்தான்.

அறை வாசலிலே காத்திருந்தான் சம்பத்.அவனது அறைக்கூட்டாளி.மணிசங்கரின் ட்ரீட்காக ஆபிசில் இருந்து அரை மணி நேரம் முன்னதாகாவே வந்து காத்துக்கொண்டிருந்தான்.

டேய் எவ்ளோ நேரம் டா உனக்கு வெயிட் பண்றது?இப்போலாம் பத்து மணிக்கெல்லாம் பார மூடிர்ரானுங்க.

அவனை ஷூ கலட்ட கூட விடாமல் அப்படியே பாருக்கு இழுத்து சென்றான் சம்பத் .

சந்தோஷமோ வருத்தமோ ஒரு குவார்ட்டர உள்ள தள்ளியாச்சுனா மனசு விட்டு பேசிடுவான்.இப்போ மனசுல சந்தோஷமும் இல்ல வருத்தமும் இல்ல குற்ற உணர்ச்சி தான் இருக்குது.எதுவுமே பேசாமல் கப் கப்பென்று அடித்து விட்டு மட்டயாகினான் மணிசங்கர்.சம்பத்தும் வந்ததுக்கு வஞ்சனை வைக்காம நல்லாவே அடிச்சிட்டான்.ஒருத்தர் தோள்ல ஒருத்தர் சாஞ்சு பாட்டு பாடிகிட்டே
ஒரு வழியா வீடு போயி சேர்ந்தானுங்க ரெண்டு பேரும்.

அர்த்தமில்லாத கனவுகளும் நடு நடுவே சம்பதின் உளரல்களும் எப்போது தான் இந்த ராத்திரி முடியும்னு ஆகிப்போச்சு அவனுக்கு.காலையில எழுந்ததும் தலை வழி வேற.இந்த எழவுக்கு தான் ஹாட் அடிக்க வேணாங்றது.சனியன் சாயங்காலம் வரை தலை வலிக்குமே.ஆபிஸ் போனா அது வேற இருக்கும்.
தனது சர்வ லோக வலி நிவாரனியை(சிகரெட்) எடுத்தான்.

பாதி தம் முடிந்த போது தான் அவனுக்கு அது தோன்றியது.அப்படி என்ன தப்பு நான் பண்ணிட்டேன்?அவளுக்கே தெரியாம அவள ஒருத்தனுக்கு உதவி பண்ண வைச்சுருக்கேன்.நல்ல விஷயம் தான.இதுனால யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லயே.பாவம் தாமோதரன்.யாரு பெத்த பிள்ளையோ?அதுக்கு தான் 100 ரூபாய் நஷ்டம்.சரி நம்ம வேலைய பாப்போம்.உற்சாகமாக கிளம்பினான் மணிசங்கர்.
இன்றும் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள் ஹரிதா.இன்று அவனே ஆரம்பித்தான்.

ஹலோ

அவ்வளவு தான்.அதுக்கு அப்புறம் அவ நிறுத்தவே இல்ல.சரியான வாயடி.ஆனா
அவ பேசுனப்ப பொழுது போனதே அவனுக்கு தெரியல.

திடீரென்று சம்பந்தமே இல்லாமல் நீங்க ஏன் இந்த சூப்பர் சிங்கர் மாதிரி எதாவது
ட்ரை பண்ணக்கூடாது என்று கேட்டாள்.அவன் முழித்தான்.

நேத்து நைட் பாட்டு சூப்பர்.கேட்டுட்டு ராத்திரி பூரா தூக்கமே வரல.தெரியுமா?

என்ன பாட்டு?

ஹலோ நானும் உங்க ஏரியா தான்.

ஒரு வழியாக சிரித்து சமாளித்தான்.இன்னிக்கு வேலை முடிஞ்சு கொஞ்சம் சந்தோஷமாகவே கிளம்பினான்.யாரோ கூப்பிட்டது போல இருந்தது.திரும்பி பார்த்தான்.ஹரிதா நின்று கொண்டிருந்தாள்.

மணிசங்கர் உங்களுக்கு டபுள்ஸ் ஓட்டத் தெரியுமா?

பதிலுக்கு காத்திராமல் வந்து அவளே பின்னாடி ஏறிக்கொண்டாள். கண்ணாடியில் அவள் முகம் பார்த்தான் அவன்.

Monday, June 22, 2009

அன்று மழை பெய்தது-4

திட்டத்தின் இரண்டாவது கட்டம்.இப்போ தான் ஜாக்கிரதையா இருக்கனும்.

ஹலோ நான் ஹரிதா

பெண் குரலில் பேசிப்பார்த்து கொண்டான்.ரெண்டு நிமிஷம் பொண்ணு மாதிரி பேசனும்.அடுத்து ஹரிதாவோட அண்ணன் மாதிரி பேசி அவனை மிரட்டி விட்டுடனும்.கண்களை மூடி சிகரட்டை இழுத்தான்.புகையை ஊதிய படி அக்செப்ட் (accept) பட்டனை அழுத்தினான்.

ஹரிதா:ஹலோ
தாமோ:ஹலோ ஹரிதா நான் தாமோ பேசறேன்
ஹரிதா:சொல்லுங்க தாமோ

ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு முறை சிகரட்டை இழுத்து கொண்டான் மணிசங்கர்.

தாமோ:என்ன பண்ணிடு இருக்க?
ஹரிதா:படம் பாத்துட்டு இருக்கேன்
தாமோ:என்ன படம்?
ஹரிதா:யாரடி நீ மோகினி?
தாமோ:அய்யோ எனக்கும் ரொம்ப பிடிக்கும்
ஹரிதா:நான் அப்புறம் கூப்பிடுறேன்.யாரோ வர்ர மாதிரி இருக்கு.வீட்ல யாரச்சும் பாத்தா நான் அவ்ளோ தான்
தாமோ:ஹேய் ஹேய்

ம்ம்.இது தான் நேரம்.ஹரிதாவோட அண்ணனை உள்ளே கொண்டு வந்திட வேண்டியது தான்.

ஹரிதா:அண்ணா

தாமோ:நான்

மணிசங்கர்:இனி போனை கையில தொட்ட வெட்டிருவேன்.என்ன திமிரு டீ உனக்கு.

ஹரிதா:அண்ணா

மனிசங்கர்:யாரு டீ அவன்?சொல்லு அவனை பொளந்துட்டு வந்து உன்னை பாத்துக்றேன்.

எதிர் முனையில் போன் கட் ஆனது.

கண்களை மூடி பெரு மூச்சு விட்டான் மணிசங்கர்.கையில் சிகரெட் சுட்டது.மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.ஹரிதாவின் ஆர்க்குட் அக்கௌன்டை திறந்தான்.சொல்லாமல் கொள்ளாமல் தாமோதரன் அவளது நன்பர்கள் குழுவில் இருந்து ஓடி போயிருந்தான்.இவ்ளோ பயம் இருக்க இவனெல்லாம் ஏன் தான் கடலை போட ஆசை படுறானோ என்று நினைது கொண்டே அப்பாவிற்க்கு போன் செய்தான்.

இரண்டு மாதங்கள் கழித்து(வெயில் காலம்)...........

நேரம் காலம் கூடி வரும்னு சொல்றது எவ்ளோ பெரிய உண்மைனு அப்போ தான் மணிசங்கருக்கு புரிந்தது.ஒரு வேளை வேலையெ கிடைக்காம போயிடுமோனு அவன் பயப்பட ஆரம்பிச்ச காலகட்டம் அது.அவனே எதிர்பார்க்காமல் தான் அந்த வேலை அவனுக்கு கிடைத்தது.பெரிய ஐ.டி கம்பெனி.முதல் இரண்டு மாதம் ட்ரெயினிங்.மாதம் இருபதாயிரம் சம்பளம்.ச்ச உனக்கு வந்த வாழ்வை பாரு டா மணிசங்கர்.அவனை அவனே மெச்சி கொண்டான்.

ரிஷஷன்(recession) லே ஆப் அது இதுனு என் வேலைய புடிங்கிடாத கடவுளே.எனக்கு வேலை கொடுக்க இன்னொரு மாங்கா மண்டயன் கிடைக்க மாட்டான்.கடவுளை வேண்டிக்கொண்டே முதல் நாள் அலுவலகத்துக்கு சென்றான் மணிசங்கர்.அவனுடன் சேர்த்து மொத்தம் 60 பேர் தேர்ந்தெடுக்கபட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் செமினார் ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர்.அங்கு தான் அவர்களுக்கு வகுப்பு.மணிசங்கர் மும்மரமாக செல்லில் கேம் ஆடிக்கொண்டிருந்தான்.அவன் பக்கத்தில் யாரோ உட்காருவது தெரிந்தது. மெதுவாக தலையை திருப்பினான்.பக்கதில் ஒரு பெண்.அதுவும் பிப்பா.அவள் கை நீட்டினாள்.

பெண்:ஹாய்

இவளை எங்கயோ பாத்திருக்கொமே

மணிசங்கர்:ஹாய்
பெண்:நான் ஹரிதா.ஹரிதா ராமச்சந்திரன்

அதற்க்குள்அறைக்குள் அவர்களது மேலதிகாரி நுழைய எல்லோரும் எழுந்தார்கள்.வியர்வையை துடைத்தபடி மணிசங்கரும் எழுந்தான்.


Saturday, June 20, 2009

அன்று மழை பெய்தது-3

வெறுப்புடன் கம்ப்யூட்டரில் மெயில் செக் பண்ணத்தொடங்கினான். முதல் மெயில் ஆர்க்குட்டில் இருந்து வந்திருந்தது.

email:r.haritha.86@gmail.com
password:haritharamachandran

அவன் போஸ்ட் பண்ணி இருந்த ஏதோ ஒரு லிங்க்க க்ளிக் பண்ணியிருக்கா. தனக்குள் சிரித்துக்கொண்டான். ஒரு க்ளிக்கில் தங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வார்ட் வேறு ஒருவருக்கு போய் விடும் என யாரும் எதிர் பார்ப்பதில்லை தான் ஆனால் அவ்வளவாக இன்டெர் நெட் பற்றி தெரியாத என்னாலயே இவ்ளோ ஈசியா கண்டு பிடிக்க முடியுதுனா விஷயம் தெரிஞ்சவன் என்னென்ன பண்ணுவான் என்று நினைத்து பார்த்தான்.மூளையின் மூலையில் ஒரு திட்டம் உதயமானது.

ஹரிதாஅக்கௌன்ட் மூலமா ஏதாவது ஒரு சாட்(chat) ரூமில் நுழைந்து ஏதாவது ஒரு டாமா கோழிய அமுக்கி அவன ரீ-சார்ஜ் பண்ண வெச்சுட வேண்டியது தான்.
சாட்டிங்கில் நுழைந்த இரண்டாவது நிமிடத்தில் சிக்கியது டாமா கோழி. கோழியின் பெயர் தாமோதரன்.

CHAT HISTORY:

DAMODARN-->Devil's re-incarnation invites haritha ramachandran to chat

Damo:hiiiiiii..,,
haritha:hai
Damo:how r u??
haritha:fine.how r u?
Damo:me too..,,wat r u doing??

மணிசங்கர்:லூசுப்பைய ப்ரொபைல் பாத்து தெரிஞ்சுக்கமாட்டான்.இத கூட நம்ம தான் பாத்து சொல்லனும்.

haritha:check my profile to know abt me
Damo:sure haritha..,,u seems like a intresting person..,,
haritha:is it so?thank u
Damo:do u have a mic??
haritha:no
Damo:mobile?

மணிசங்கர்:ஒரு வழியா விஷயத்துக்கு வந்துட்டான்யா

haritha:yeah
Damo:shall v talk now??
haritha:sorry.i don't have validity
Damo:k then temme ur no..,,i'll recharge 4 u..,,

மணிசங்கர்:கொஞ்சம் பிகு பண்ணி தான் குடுக்கனும். அப்போ தான் பிகருனு நம்புவான்.எது சொன்னலும் நம்புறானே

haritha:its ok.i'll call u tomorrow
Damo:hey if u think me as ur frnd then tell me..,,
haritha:k.98945*****
Damo:k.i got it...,,call u in few min..,,
haritha:k thank u.ur num?
Damo:no thanks b/w frnds..,,ok va?99620*****
haritha:k
Damo:bye..,,catch up wid u soon in mob..,,
haritha:bye

Damo signed out.

மணிசங்கரால் நம்பவே முடியல.இவ்ளோ ஈசியா ஏமந்துட்டானே.வாழ்க ஹரிதா ராமச்சந்திரன்.வளர்க தாமோதரன்.

உலகமே நாடக மேடை
அதில் நடிகன் தானே தேவை..செல் போன் சிணுங்கத்தொடங்கியது.எடுத்து பார்த்தான்.தாமோதரன் காலிங்.



Thursday, June 18, 2009

அன்று மழை பெய்தது-2

செலவு கணக்கை சரி பார்க்க தொடங்கினான்.

mc half-140.00
water pocket-10.00
dum-39.00
pickle-5.00
kadalai mittai-5.00

total-199.00
balance-1.00

அப்பாவிடம் ரூபாய் அனுப்ப சொல்லனும்.மொபைல்ல பேலன்ஸ் பார்த்தான்.30 ரூபாய் 25 பைசா இருந்தது.மணி 10.30 ஆகுது.காலையில சொல்லிக்கலாம்.

சொர்க்கம் மதுவிலே ஆரம்பித்தது

எப்போது?எப்படி தூங்கினான் என்பது அவனுக்கே தெரியவில்லை.எழுந்து பார்த்த போது வியர்வையில் குளித்திருந்தான்.கரன்ட் இல்லை.சுற்றி இருந்த இருள் இன்னும் விடிய வில்லை என அவனுக்கு உணர்த்தியது.சற்று தள்ளி தரையில் கிடந்த செல் போனில் அலாரம் அடித்து கொண்டிருந்தது.எடுத்து பார்த்தான் ஆஃப் ஆகியது.தள்ளாடி எழுந்து சென்று கதவை திறந்தான் மழை கொட்டி கொண்டிருந்தது.அப்படியே கீழே விழுந்தான்.
தட் தட் தட்

மழை நீர் அவனது முகத்தில் தெறித்துக்கொண்டிருந்தது.செத்த பிணத்திற்கு உயிர் வந்தாற்போல திடீரென்று துள்ளி எழுந்தான்.கரண்ட் வந்திருந்தது.சார்ஜ் போட்டு விட்டு மொபைலை ஆன் செய்தான்.காலர் ட்யூனுக்கு மாத வாடகை 30 ரூபாயை எடுத்துட்டானுங்க.பரதேசி நெட்வொர்க்.

கையில் 1 ரூபாய் மொபைலில் 25 பைசா,கூட யாரும் இல்ல .எப்படி அப்பாவ பணம் போட்டு விட சொல்றது?தலையில் கை வைத்த படி வெளியே பார்த்தான்.
இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது.

Saturday, June 13, 2009

அன்று மழை பெய்தது-1

இடம்: பள்ளிக்கரணை(சென்னை)
மழை காலம்


தெருவெங்கும் இருள் வழிந்தோடி கொண்டிருந்தது. மளிகை கடையை பூட்டி கொண்டிருந்தார் அண்ணாச்சி.

அண்ணா ஒரு பாக்கெட் கிங்க்ஸ்
நாற்பது ருபாயை கொடுத்தான் மணிசங்கர்

பாக்கெட் நாப்பத்தஞ்சு ரூபாய்
எப்போ இருந்து?
இன்னிக்கு தான் கூட்டிருக்கு
அப்பொ 9 கிங்க்ஸ் 1 ஃபில்டெர் கொடுங்க
பர்ஸை எடுத்து பார்த்தான் மிச்சம் 1 ரூபாய் இருந்தது.ம்ம்.சென்னைக்கு போனா வேலை கிடைக்கும்னு நம்பி வருஷா வருஷம் சென்னை வரும் ஆயிரக்கணக்கானோரில் மணிசங்கரும் ஒருவன்.பழைய படங்களில் வரும் வேலை இல்லா பட்டதாரிகளை போல சாப்பாடுக்கு கஷ்டப் படும் நிலையில் அவன் இல்லை.மாதா மாதம் முதல் வாரத்தில் சம்பளம் போல ஆறாயிரமோ ஏழயிரமோ அவனது அப்பா அனுப்பி விடுவார்.
தனியே தண்ணி அடிப்பது ஒரு சுகம்.யாரோட புலம்பலயும் கேட்க வேணாம்.மெதுவா ஒவ்வொரு பெக்கா போட்டு கிட்டே ராஜா பாட்டு கேட்டா அது தான் சொர்க்கம். நண்பர்கள் இருவரும் ஊருக்கு போய் விட்டதால் மணிசங்கரும் சொர்க்கத்துக்கு போக தான் ரெடி ஆகி கொண்டிருந்தான். வீட்டை நெருங்கும் போது குளிர்க்காற்று அவனை அரவணைத்தது போல இருந்தது.கதவை திறக்கும் போது ஒரு துளி நீர் கையில் விழுந்தது.இன்னிக்கு மழை பெய்யும் என்று நினைத்த படி வானத்தை அண்ணாந்து பார்த்தான்.இடி இடித்தது.