Wednesday, July 8, 2009

அன்று மழை பெய்தது-7

யாரும் கவனிக்காதவாறு ஒரமாக சென்று அமர்ந்தான் மணிசங்கர்.தாமோதரன் பேசத்தொடங்கினார்.

வணக்கம்

மைக்கை தட்டிப்பார்த்தான்.உங்களை சந்திக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.என் பெயர் தாமோதரன்.நான் தான் உங்க புது ப்ராஜக்ட் மானேஜர்.அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க சரியா பண்ணாலே போதும் எல்லாம் நல்ல படியா போகும்.நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.எல்லோரும் போய் வேலைய பாருங்க.

மணிசங்கரால் நம்பவே முடியவில்லை.அன்னிக்கு அந்த பம்பு பம்புனானே அவனா இவன்?அவன் சிந்தனையை கலைக்க செல்போன் அலறியது.எடுத்து பார்த்தான் ஹரிதா மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

சென்னை வந்தாகிவிட்டது.மதியம் சந்திப்போம்.

விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டான் மணிசங்கர்.அடுத்து என்ன நடக்கும்னு அவனால நெனைச்சு கூட பார்க்க முடியவில்லை.ஒரு வேலை ஹரிதாவ அடையாளம் கண்டு பிடிச்சுருவானோ?கண்டுபிடிச்சா என்ன?அவளுக்கு தான் இவனை தெரியாதே.அவசரப்பட்டு எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு நாமளே காட்டி கொடுத்த கதையாகிட கூடாது.மதியம் நிலவரத்த பாப்போம்.காலண்டரில் பார்த்தான்.1.30-2.30 ராகு காலம்.மதியம் நெருங்கியது.வழி மேல் விழி வைத்து ஹரிதாவுக்காக காத்திருந்தான் மணிசங்கர்.

சரியாக 1.35க்கு வந்து சேர்ந்தாள் ஹரிதா.அவனை பார்த்ததும் அவள் வாயில் இருந்து வந்த முதல் வார்த்தை

கங்கிராட்ஸ்.சாதிச்சு காட்டிட்ட போல
நீ என்ன சொல்ற?
உதட்டில் போலிப்புன்னகையை ஏந்தினாலும் முகத்தில் பதட்டம் அவனை காட்டி கொடுத்தது
ஒரு வழியா ரவிக்குமார ஓடவிட்டுட்ட.புது மானேஜர் எப்படி?
இனிமே தான் தெரியும்
கவலை படாத.நல்லவனா தான் இருப்பான்.
இருந்தா பரவாயில்ல.
சரி நான் போயி பாத்திட்டு வர்றேன்
ஆல் த பெஸ்ட்

அவளுக்கு அவனை பார்க்கையில் சிரிப்பு வந்தது

நான் என்ன பரீட்சைக்கா போறேன்?
இருக்கலாம்

இன்னிக்கு உனக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு. நான் வர்றேன்.
அவள் சிரித்துக்கொண்டே தாமோதரன் அறையை நோக்கி நடந்தாள்.பைத்தியம் இன்னிக்கு தான் பிடிச்சிருக்கா?மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் மணிசங்கர்.இன்னும் அஞ்சு நிமிஷம் தான்.பொறுத்துக்கோ.எப்போது தாமோதரனின் அறைக்கதவு திறக்கும்?எப்போது ஹரிதா வெளியே வருவாள்?

கம்பெனியை விட்டு வெளியே வந்து சிகரெட்டை பற்ற வைத்தான்.
அவன் மீண்டும் உள்ளே செல்லும் போது ஹரிதா அவள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்போவே போய் கேட்டா ஒரு வேளை சந்தேகப்படுவாளோனு அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது அதுனால அவளா வந்து சொன்னா கேட்கலாம்னு அவன் வேலையை பார்க்க போனான்.ஆனால் வேலையில் மனம் இறங்கவில்லை.எட்டி அவளைப்பார்த்தான்.அவள் அமைதியாக வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.ஒன்னும் நடக்கல. தாமோதரனுக்கு அவளை ஞாபகம் இல்லை போல.ஞாபகம் இருந்தா ஹரிதாவை கேட்டிருப்பான் அவன் கேட்டிருந்தா அவ நம்ம கிட்ட சொல்லி இருப்பா.நிம்மதி பெருமூச்செறிந்தான் மணிசங்கர்.

மனித மனம் குரங்கு போல கிளைக்கு கிளை தாவிச்செல்லும் என்பது தான் எத்தனை உண்மை?இந்த குரங்கும் கிளை தாவியது.ஒரு வேளை அவனும் பொறுமையா டீல் பண்றானா?இல்லை எனக்கு தான் இப்படி தோணுது.யாருக்கும் யாரையும் தெரியாது.எதுக்கும் போய் அவன் என்ன பண்ணிட்டு இருக்கிறான்னு பாத்திட்டு வந்திடலாம்.

ஒரு ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு தாமோதரனது அறைக்குள் நுழைந்தான் மணிசங்கர்.தாமோதரனது முகம் கொஞ்சம் சுருங்கி போய்த்தான் இருந்தது.அது இது என்று ஒரு பத்து நிமிடம் அவனிடம் மொக்கையை போட்டுவிட்டு கிளம்பினான் மணிசங்கர்.அறைக்கதவை திறக்கும் போது அவனை தாமோதரன் கூப்பிட்டான்.

மணிசங்கர்
என்ன சார்?
மிஸ் ஹரிதாவை வரச்சொல்ல முடியுமா?

எதுக்கு?தொண்டை வரை வந்த வார்த்தைகளை முழுங்கினான் மணிசங்கர்.

சொல்லிடுறேன் சார்.