Wednesday, June 24, 2009

அன்று மழை பெய்தது-5

போகும் போது இருந்த உற்சாகம் மகிழ்ச்சி எல்லாம் மறைந்து சோர்ந்து போய் வீடு திரும்பினான் மணிசங்கர்.ஹரிதாவையும் அவனையும் ஒரே குழுவில் வேறு போட்டுவிட்டார்கள்.காலையில நேரம் காலம் கூடி வந்திருச்சுனு சந்தோஷப்பட்டவன் சாயங்காலம் விதி வலியதுனு நொந்து போயிருந்தான்.

அறை வாசலிலே காத்திருந்தான் சம்பத்.அவனது அறைக்கூட்டாளி.மணிசங்கரின் ட்ரீட்காக ஆபிசில் இருந்து அரை மணி நேரம் முன்னதாகாவே வந்து காத்துக்கொண்டிருந்தான்.

டேய் எவ்ளோ நேரம் டா உனக்கு வெயிட் பண்றது?இப்போலாம் பத்து மணிக்கெல்லாம் பார மூடிர்ரானுங்க.

அவனை ஷூ கலட்ட கூட விடாமல் அப்படியே பாருக்கு இழுத்து சென்றான் சம்பத் .

சந்தோஷமோ வருத்தமோ ஒரு குவார்ட்டர உள்ள தள்ளியாச்சுனா மனசு விட்டு பேசிடுவான்.இப்போ மனசுல சந்தோஷமும் இல்ல வருத்தமும் இல்ல குற்ற உணர்ச்சி தான் இருக்குது.எதுவுமே பேசாமல் கப் கப்பென்று அடித்து விட்டு மட்டயாகினான் மணிசங்கர்.சம்பத்தும் வந்ததுக்கு வஞ்சனை வைக்காம நல்லாவே அடிச்சிட்டான்.ஒருத்தர் தோள்ல ஒருத்தர் சாஞ்சு பாட்டு பாடிகிட்டே
ஒரு வழியா வீடு போயி சேர்ந்தானுங்க ரெண்டு பேரும்.

அர்த்தமில்லாத கனவுகளும் நடு நடுவே சம்பதின் உளரல்களும் எப்போது தான் இந்த ராத்திரி முடியும்னு ஆகிப்போச்சு அவனுக்கு.காலையில எழுந்ததும் தலை வழி வேற.இந்த எழவுக்கு தான் ஹாட் அடிக்க வேணாங்றது.சனியன் சாயங்காலம் வரை தலை வலிக்குமே.ஆபிஸ் போனா அது வேற இருக்கும்.
தனது சர்வ லோக வலி நிவாரனியை(சிகரெட்) எடுத்தான்.

பாதி தம் முடிந்த போது தான் அவனுக்கு அது தோன்றியது.அப்படி என்ன தப்பு நான் பண்ணிட்டேன்?அவளுக்கே தெரியாம அவள ஒருத்தனுக்கு உதவி பண்ண வைச்சுருக்கேன்.நல்ல விஷயம் தான.இதுனால யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லயே.பாவம் தாமோதரன்.யாரு பெத்த பிள்ளையோ?அதுக்கு தான் 100 ரூபாய் நஷ்டம்.சரி நம்ம வேலைய பாப்போம்.உற்சாகமாக கிளம்பினான் மணிசங்கர்.
இன்றும் அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள் ஹரிதா.இன்று அவனே ஆரம்பித்தான்.

ஹலோ

அவ்வளவு தான்.அதுக்கு அப்புறம் அவ நிறுத்தவே இல்ல.சரியான வாயடி.ஆனா
அவ பேசுனப்ப பொழுது போனதே அவனுக்கு தெரியல.

திடீரென்று சம்பந்தமே இல்லாமல் நீங்க ஏன் இந்த சூப்பர் சிங்கர் மாதிரி எதாவது
ட்ரை பண்ணக்கூடாது என்று கேட்டாள்.அவன் முழித்தான்.

நேத்து நைட் பாட்டு சூப்பர்.கேட்டுட்டு ராத்திரி பூரா தூக்கமே வரல.தெரியுமா?

என்ன பாட்டு?

ஹலோ நானும் உங்க ஏரியா தான்.

ஒரு வழியாக சிரித்து சமாளித்தான்.இன்னிக்கு வேலை முடிஞ்சு கொஞ்சம் சந்தோஷமாகவே கிளம்பினான்.யாரோ கூப்பிட்டது போல இருந்தது.திரும்பி பார்த்தான்.ஹரிதா நின்று கொண்டிருந்தாள்.

மணிசங்கர் உங்களுக்கு டபுள்ஸ் ஓட்டத் தெரியுமா?

பதிலுக்கு காத்திராமல் வந்து அவளே பின்னாடி ஏறிக்கொண்டாள். கண்ணாடியில் அவள் முகம் பார்த்தான் அவன்.