Wednesday, September 23, 2009

அன்று மழை பெய்தது-11

ஹரிதா:என்ன த்ரில்லரா?
மணிசங்கர்:கதைய கேட்டுட்டு நீயே சொல்லு
ஹரிதா:சரி சொல்லு.
மணிசங்கர்:ஹீரோ சென்னைல வேலை இல்லாம சுத்திட்டு இருக்கான்
ஹரிதா:ஹீரோ பேரு என்ன மணிசங்கரா?
மணிசங்கர்:அது உன் இஷ்டம்
ஹரிதா:சரி சொல்லு
மணிசங்கர்:ஒரு நாள் நைட் சரக்கு எல்லாம் வாங்கிட்டு ரூமுக்கு வர்றான்.சரக்கு வாங்கினது போக மிச்சம் அவன் கிட்ட ஒரு ரூபாய் தான் இருந்தது.அப்பா கிட்ட பணம் போட்டு விட சொல்லலாம்னு பாத்தா லேட் ஆயிருச்சு.காலையில சொல்லிக்கலாம்னு தண்ணி அடிச்சுட்டு தூங்கிட்டான்.
ஹரிதா:சொந்த கதை போல
மணிசங்கர்:ஆமா அப்படியும் சொல்லலாம்
ஹரிதா:சரி மேல சொல்லு
மணிசங்கர்:காலையில எழுந்திருச்சு பாத்தா மொபைல்ல பேலன்ஸ் இல்ல.ஹலோட்யூனுக்கு எடுத்துட்டானுங்க
அவள் சிரிப்பது அவனுக்கு கேட்டது.கதை முடியும் போது அவள் என்ன மன நிலையில் இருப்பாளோ என யோசித்தான்.
ஹரிதா:ஹேய் கதை இன்டிரஸ்டிங்கா போது டா..ம் ம் சொல்லு.
மணிசங்கர்:அவன் ஒரு பொன்னோட ஆர்க்குட் அக்கௌன்ட ஹேக் பண்ணி அத வச்சு ஒரு பையன ஏமாத்தி அவன் நம்பர்க்கு ரீ சார்ஜ் செய்ய வைச்சுடரான்.அப்புறம் அடுத்த மாசம் வேற போஸ்ட் பெய்ட் சிம் மாத்திடுறான்.புது சிம் வந்த நேரம் அவனுக்கு வேலை கிடைச்சிடுது.யார் அக்கௌன்ட அவன் யூஸ் பண்ணானோ அந்த பொண்ணும் அவன் கூட வேலை பாக்குறா.ஒரு கட்டத்தில அவளை லவ் பண்ண ஆரம்பிச்சுடுறான்.அவளும் அவனை லவ் பண்றா.அப்போ அவங்க ஆபிஸ்க்கு ஒரு புது மானேஜர் வர்றார்.அவர் தான் அந்த ரீ சார்ஜ் செஞ்சு விட்டவர்.மானேஜரும் அந்த பொண்ண மறக்கல.கதை புரியுதா ஹரிதா?
எதிர் முனையில் லேசாக அழுகை சத்தம் கேட்டது.
மணிசங்கர்:ஹரிதா?
ஹரிதா:பேசாத.நீ என்ன ஏமாத்திட்ட.
அவள் பேச்சில் சுத்தமாக அன்பு மறைந்து போயிருந்தது.
மணிசங்கர்:ஆமா உங்கிட்ட எப்படி மன்னிப்பு கேக்குறதுனு எனக்கு தெரியல அதுனால தான் கதை மாதிரி சொன்னேன்.
ஹரிதா:நீ இப்படி ஒரு கேவலமான விஷயத்த பண்ணுவனு நான் நெனைச்சு கூட பாக்கல.அது எப்படி அடுத்தவங்க அக்கௌன்ட ஹேக் பண்ணி..உன்னை நான் எவ்ளோ நம்பினேன்?இப்போ மட்டும் சொல்ற?என்ன திருந்திட்டியா?
மணிசங்கர்:இல்ல ஒரு பாடம் கத்துக்கிட்டேன்.
ஹரிதா:என்ன?
மணிசங்கர்: போனை கட் பண்ணிடாம மிச்ச கதையையும் கேட்டா உனக்கே புரியும்.தாமோதரன பாத்த உடனே அவனால உனக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு நான் பயந்தேன்.அவனும் அதுக்கு ஏத்தாப்புல தான் நடந்துகிட்டான்.அன்னிக்கு நாம மொபைல் வாங்க போனப்ப அங்க அவனை பாத்தேன்.அடுத்த கொஞ்ச நாள்ல அவன் எனக்கு ட்ரான்ஸ்பர் குடுத்தான்.அவன் உனக்கு தொல்லை குடுக்கிறான்னு எனக்கு புரிஞ்சிருச்சு ஆனா நீ எங்கிட்ட சொன்னா பிரச்சனை பெருசாகும்னு சொல்லவே இல்ல.நீ சொல்லாட்டி என்ன? நாம பரிஸ்டா போயிட்டு வந்த அன்னிக்கு அவன் என் வீட்டுக்கே வந்து என்னை மிரட்டிட்டு போயிட்டான்.அந்த கடுப்புல தான் அன்னிக்கு தண்ணி அடிச்சேன்.அதுக்கு அப்புறம் நீ தேவதை மாதிரி என் உயிர காப்பாத்தின.

அவனது குரல் உடைந்தது.அவனால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை.அவளே பேசினாள்

ஹரிதா:சரி கவலை படாத.இப்போ என்ன என்கிட்ட சொல்லிட்டேல. நீ சொன்ன மாதிரியே நான் வேலைய விட்டுடுறேன்.போதுமா?

அவள் குரலும் உடைந்து தான் போயிருந்தது

மணிசங்கர்:கதை இன்னும் முடியல ஹரிதா.

அவன் ஒரு இடைவெளி விட்டான்.இருவருமே பேசவில்லை.அமைதியின் மறுபக்கத்தை இருவரும் உணர்ந்தார்கள்.

மணிசங்கர்:நான் உன்னை பொய் சொல்லி லவ் பண்ணேன்.நீ என்ன பொய்யாவே லவ் பண்ண.ஏன் ஹரிதா?

அவள் விசும்பலை நிறுத்தினாள்.அவன் அழுகையை அடக்க முயன்று தோற்று போய் அழுது கொண்டே பேசத்தொடங்கினான்.