Tuesday, October 27, 2009

அன்று மழை பெய்தது - 12

ஹரிதா:என்ன சொல்ற?
மணிசங்கர்:உன்னோட பிறந்த நாளுக்கு ஒரு மொபைல் வாங்கி குடுத்தேன்ல அதுல ஒரு ரிக்கார்டர் இன்ஸ்டால் பண்ணி அதை ஹைட் பண்ணி வைச்சிருந்தேன்.உன் மேல சந்தேகப்பட்டு இல்ல.ஒரு வேளை தாமோதரன் உனக்கு போன் பண்ணி தொல்லை குடுத்தா அத நான் தெரிஞ்சுக்கனும்ல அதனால தான் அப்படி பண்ணேன்.நீ யார் கூட பேசினாலும் அது ரெக்கார்ட் ஆகி தனியா ஸேவ்(save) ஆயிடும்.
அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல உன் மொபைல பாக்கனும்னு வாங்கினேன்ல அப்போவே நீ பேசுனத என் மொபைலுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டேன்.தாமோதரன் கூட என்ன பேசுனனு நியாபகம் இருக்கா?

மறுமுனையில் மரண அமைதி நிலவியது.

மணிசங்கர்:அந்த ரெக்கார்டிங்க கேட்ட உடனே தாமோதரனை கூப்பிட்டு பேசினேன்.அந்த மழை பெய்த இரவு முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு ஆர்க்குட்ல அவன் உனக்கு திரும்பவும் ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் (Friend request) குடுத்திருக்கான்.நீயும் அத ஏத்துக்கிட்ட.மணிக்கணக்கா ரெண்டு பேரும் சாட் பண்ணியிருக்கீங்க.முதல் முதலா சத்யம் தியேட்டர்ல மீட் பண்ணியிருக்கீங்க.இது நடந்து ஒரு மாசத்துல ரெண்டு பேரும் மகாபலிபுரம் போயிருக்கீங்க.அங்க என்ன நடந்ததுனும் எனக்கு தெரியும்.எந்த தப்புக்கும் ஒரு காரணம் இருக்கனும் ஹரிதா.நீ பண்ண தப்புக்கு என்ன காரணம்னு மட்டும் சொல்லு.ப்ளீஸ்

அவள் நடுங்கும் குரலோடு பேசத்தொடங்கினாள்

ஹரிதா:எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே நான் குழந்தையா இருக்கப்ப இருந்தே வேலைக்கு போயிருவாங்க.அப்போ இருந்து நானே தான் வளர்ந்தேன்.ஏதோ ஒரு சந்தோஷம்னாலோ கஷ்டம்னாலோ அத ஷேர் பண்ணிக்க எனக்கு யாருமே இல்ல.அப்போ தான் என் வாழ்க்கைல இன்டெர் நெட் வந்தது.சாட்டிங்க் எனக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷமா நான் நினைச்சேன்.கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிஞ்சது என் கூட சாட் பண்ற எல்லோருமே வேற ஒன்ன எதிர்பாக்குறாங்க.ஒருத்தன் ரெண்டு பேரு இல்ல.பதினாலு வயசு பையன்ல இருந்து பல்லு போன கிழம் வரை எல்லோருக்கும் ஒரே விஷயம் தான்.சரின்னு நானும் முதல்ல சாட்டிங்க் தானேனு அவங்க இஷ்டப்பட்ட படி பண்ணேன்.அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல நான் அதுக்கு அடிமை ஆயிட்டேன்.அப்புறம் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் டேட்டிங்க்.தாமோதரனும் அப்படி தான்.உன்னை பாக்குற வரை நான் அப்படி தான் இருந்தேன். நான் இத்தனை வருஷமா ஏங்கிகிட்டு இருந்த அன்பை நீ எனக்கு கொடுத்த.
மணிசங்கர்:தாமோதரன் அப்படி இல்ல ஹரிதா.அவன் உன்னை லவ் பண்றான்
ஹரிதா:நீ என்னை லவ் பண்ணலையா?
மணிசங்கர்:பண்ணினேன்
ஹரிதா:யோசிச்சு தான் சொல்றியா?
மணிசங்கர்:முடிவு பண்ணிட்டு தான் பேசறேன்.
ஹரிதா: நீ என்ன பெரிய யோக்கியனா?இதை எல்லாம் ஆரம்பிச்சு வைச்சவனே நீ தானே.
மணிசங்கர்:அதனால இதை நானே முடிச்சும் வைச்சிடறேன். நீ தாமோதரன் கூட சேர்ந்து வாழுற வழிய பாரு
ஹரிதா:நான் யாரை லவ் பண்ணனும்னு நீ எனக்கு சொல்ல வேணாம்.
மணிசங்கர்:நீ இன்னும் திருந்தல ஹரிதா.
ஹரிதா:என்ன சொல்ற?
மணிசங்கர்:இப்போ கூட எங்கிட்ட போன் பேசிட்டே சாட் பண்ணிட்டு தானே இருக்க?
ஹரிதா:இல்ல.
மணிசங்கர்:பொய் சொல்லாத ஹரிதா.உன் கூட சாட் பண்ணிட்டு இருக்குறது நான் தான்.என்னோட ஃபேக் ஐடி(fake id). நேத்து கூட கேம்(cam)ல மூஞ்சிய காட்டுனியே.நான் கூட இன்னிக்கு போட்டோ அனுப்புறேன்னு சொன்னேனே.மறந்துட்டியா ?

சாட்டிங்க் விண்டோவை மூடினான் மணிசங்கர்.ஹரிதாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பதட்டம் வேறு சேர்ந்து கொண்டது.

ஹரிதா:இனி உங்கிட்ட பேசி ஒரு பிரோயஜனமும் இல்ல. நீ ஒரு சைக்கோ
மணிசங்கர்: சரி நான் சைக்கோவாகவே இருந்திட்டு போறேன்.கதை இன்னும் முடியல.அதை மட்டும் கேளு.

ஹரிதாவின் முகத்தில் கேள்விக்குறிகள் படர்ந்தன.

மணிசங்கர்:நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தினப்ப எங்க போனலும் உன் டிஜிட்டல் கேமராவை எடுத்துட்டு தான் போவியாமே.பெட் ரூம் உள்பட. நெறைய ஜலபுல ஜங்க்ஸ் போட்டோலாம் எடுத்தீங்கலாமே.அவன் சொன்னான்.எப்படியும் போட்டோனு ஒன்னு எடுத்தா அத உன் லேப்டாப்புல ட்ரான்ஸ்பர் பண்ணியிருப்பனு தெரியும்.அதுனால தான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப உங்கிட்ட லேப்டாப் வாங்கினேன்.
ஹரிதா சிரித்தாள்

ஹரிதா:அதையெல்லாம் லேப்டாப்புல வைச்சுகிட்டே உங்கிட்ட குடுக்க நான் என்ன லூசா?
மணிசங்கர்:இல்ல ஹரிதா.ரெக்கவரி(recovery) தெரியுமா? நீ எப்போவோ டெலிட் பண்ண பைலை கூட தேடி எடுத்திரலாம்.தேதி மட்டும் தெரிஞ்சா போதும்.நானும் அத தான் பண்ணேன்.
ஹரிதா:ஏன் இப்படி எல்லாம் பண்ற?உனக்கு என்ன வேணும்?
மணிசங்கர்:அவன் அவன் பண்ணினதுக்கு அவன் அவனுக்கு தண்டனை. நான் ஒரு தப்பு பண்ணினேன்.அது எங்கயோ சுத்தி எனக்கு தீராத வலிய இப்போ தந்திருச்சு. நீ ஒரு தப்பு பண்ணியிருக்க. அதுக்கு உனக்கு நான் தண்டனை கூட தரல.ஒரு வாய்ப்பா தர்றேன். ஒரு குடும்பம், பாசம் இதுக்கெல்லாம் ஏங்குனதா சொல்றியே அதை எல்லாம் உனக்கு தர ஒருத்தன் ரெடியா இருக்கானே.அதை மட்டும் நெனைச்சு பாரு
ஹரிதா:நான் முடியாதுனு சொல்லிட்டா?
மணிசங்கர்:அந்த போட்டோவெல்லாம் தாமோதரனுக்கு மெயில் அனுப்பிட்டேன்.இனி நீயாச்சும் அவனாச்சும். நான் அடுத்த வாரம் இந்த ஊரை விட்டு போயிடுவேன்.

நான் ஹரிதா, பாட்டு சூப்பர்,டபுள்ஸ் ஓட்டத்தெரியுமா?இனிமே குடிக்காத ப்ளீஸ்.கல்யாணம் பண்ணிக்கலாமா? நீ என்ன பெரிய யோக்கியனா?அதையெல்லாம் லேப்டாப்புல வைச்சுகிட்டே உங்கிட்ட குடுக்க நான் என்ன லூசா?
இதுவரை அவள் பேசியது எல்லாம் மனதிற்க்குள் ஓடியது

மணிசங்கர்:இனிமே நான் சாகுற வரை உன்னை பாக்கக்கூடாது.உன் குரலை கேட்கக்கூடாது.குட் பை ஹரிதா.ஆல் தி பெஸ்ட்.

அழுது கொண்டே போனை கட் பண்ணினான் மணிசங்கர்.அதிர்ந்து போய் போனை பார்த்தாள் ஹரிதா.தாமோதரன் காலிங்க் என வந்தது.
அவள் பயந்து கொண்டே போனை எடுத்தாள்.தாமோதரன் சிரித்துக்கொண்டே போனை காதில் வைத்தான்.

முற்றும்.
©:S.Karthikeyan
என்னுரை:
இந்த கதை உருவாக பெரிதும் காரணமாக இருந்த திரு ப.நாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.