Saturday, June 13, 2009

அன்று மழை பெய்தது-1

இடம்: பள்ளிக்கரணை(சென்னை)
மழை காலம்


தெருவெங்கும் இருள் வழிந்தோடி கொண்டிருந்தது. மளிகை கடையை பூட்டி கொண்டிருந்தார் அண்ணாச்சி.

அண்ணா ஒரு பாக்கெட் கிங்க்ஸ்
நாற்பது ருபாயை கொடுத்தான் மணிசங்கர்

பாக்கெட் நாப்பத்தஞ்சு ரூபாய்
எப்போ இருந்து?
இன்னிக்கு தான் கூட்டிருக்கு
அப்பொ 9 கிங்க்ஸ் 1 ஃபில்டெர் கொடுங்க
பர்ஸை எடுத்து பார்த்தான் மிச்சம் 1 ரூபாய் இருந்தது.ம்ம்.சென்னைக்கு போனா வேலை கிடைக்கும்னு நம்பி வருஷா வருஷம் சென்னை வரும் ஆயிரக்கணக்கானோரில் மணிசங்கரும் ஒருவன்.பழைய படங்களில் வரும் வேலை இல்லா பட்டதாரிகளை போல சாப்பாடுக்கு கஷ்டப் படும் நிலையில் அவன் இல்லை.மாதா மாதம் முதல் வாரத்தில் சம்பளம் போல ஆறாயிரமோ ஏழயிரமோ அவனது அப்பா அனுப்பி விடுவார்.
தனியே தண்ணி அடிப்பது ஒரு சுகம்.யாரோட புலம்பலயும் கேட்க வேணாம்.மெதுவா ஒவ்வொரு பெக்கா போட்டு கிட்டே ராஜா பாட்டு கேட்டா அது தான் சொர்க்கம். நண்பர்கள் இருவரும் ஊருக்கு போய் விட்டதால் மணிசங்கரும் சொர்க்கத்துக்கு போக தான் ரெடி ஆகி கொண்டிருந்தான். வீட்டை நெருங்கும் போது குளிர்க்காற்று அவனை அரவணைத்தது போல இருந்தது.கதவை திறக்கும் போது ஒரு துளி நீர் கையில் விழுந்தது.இன்னிக்கு மழை பெய்யும் என்று நினைத்த படி வானத்தை அண்ணாந்து பார்த்தான்.இடி இடித்தது.


4 comments:

Priyanka Agrawalla said...

Hey Karthikeyan, nalla eluthirukka... varanichurukkathu nalla irunthathu.

waiting for ur next post :)

Unknown said...

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

Unknown said...

ஆரம்பம் நல்லா இருக்கு :) :) :) ....... ஹீரோவா யார நினைச்சுகறது ?? தனுஷ்?? ;)

Unknown said...

தங்கள் இஷ்டம் தான்