Saturday, March 5, 2011

வார்த்தை ஒன்னு


கை பேசியில் தகவல் வந்த ஒலியில் தூக்கம் கலைந்தாள் தாமரை.

"ஐ லவ் யூ. என்ன முடிவு பண்ணியிருக்க? இப்போது கூப்பிடவா?"

குறுந்தகவல் அனுப்பியிருந்தது ரவீந்திரன்.அவளது காதலன்.

வேணாம். அவர் குளிச்சிட்டு இருக்கார். இன்னிக்கு சொல்லிடலாம்.
எதுக்கு அவன் கிட்ட சொல்லிட்டு ? பிரச்சனை ஆயிர போது!
எங்க அப்பா அம்மா பண்ண தப்புக்கு இவருக்கு நாம துரோகம் பண்ணக்கூடாது.
என்ன லாஜிக்கோ?
சரி நான் அப்புறம் கூப்பிடறேன்.

உள்ளே அவளது கணவன் தினேஷ் குளித்துக்கொண்டிருந்தான்.

நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் . கல்யாணத்துக்கு முன்னாடியே இதை சொல்ல முயற்சி பண்ணேன் ஆனா சொல்ல முடியல. நான் ஒருத்தரை காதலிக்கிறேன்.

குளியலறை கதவு திறக்கவே தனது ஒத்திகையை நிறுத்திக்கொண்டாள்.
குட் மார்னிங்க். என்ன டல்லா இருக்க?
அதெல்லாம் இல்ல.
எனக்கு நாளைக்கு கொடைக்கானல்ல ஒரு மீட்டிங் இருக்கு.நீயும் வா

முதலில் தயக்கம் தோன்றினாலும் தனியே சொல்வதற்க்கு இதை விட்டால் வேறு தருணம் தோன்றாது என தோன்றவே ஒப்புக்கொண்டாள்.விருப்பமில்லாத திடீர் கல்யாணம், கல்யாணம் முடிந்தபின் வந்து கெஞ்சும் காதலன், கடைசி வரை காதலை காதிலும் வாங்க மறுத்த பெற்றோர், இப்போது ஒரு அன்னியன் கணவனாக. இவனாவது சொல்வதை புரிந்து கொள்வானா?

பயணம் முழுவதும் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அவன் கைபேசியில் யாரிடமோ கதைத்து கொண்டிருந்தான். அவள் அவனிடம் கண்களை மூடிக்கொண்டு மனதில் அவனிடம் சொல்லப்போகும் காட்சியை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள். விருந்தினர் மாளிகையை அடைந்த போது அவள் உறங்கிவிட்டிருந்தாள்.குளிரில் நடுங்கியவாறே போய் மெத்தையில் விழுந்தது தான் அவள் நினைவில் இருந்தது.

கனவிலும் அதே காட்சி தான் ஒடிக்கொண்டிருந்தது.

போர்வையை யாரோ உருவுவது போல் இருக்கவே திடுக்கிட்டு எழுந்தாள். எதிரே தினேஷ்.

உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.

இதை கேட்டதும் அவள் தூக்கம் முற்றிலுமாக கலைந்திருந்தது.

கல்யாணத்துக்கு முன்னாடியே உங்கிட்ட சொல்ல முயற்சி பண்ணேன். ஆனா முடியல.

அதே வார்த்தைகள். அவளது இதயத்துடிப்பு அதிகரிக்கத்தொடங்கியது. ஒருவேளை உண்மையை தெரிந்து கொண்டானா? தூக்கத்தில் ஏது உளறி விட்டேனா அல்லது அவனும் யாரையும் காதலிக்கிறானா? அந்த குளிரிலும் அவளுக்கு வியர்த்து.

ஐ லவ் யூ

அவள் புரியாமல் முழித்தாள்.

ஐ லவ் யூ

கொடைக்கானல், மீட்டிங் எல்லாமே இப்போது அவளுக்கு புரிந்தது

என்னை பிடிச்சிருக்கா?

பதில் சொல்ல வார்த்தைகள் இல்லாததால் அவனை எட்டி அணைத்தாள்.

முற்றும்.