Friday, June 26, 2009

அன்று மழை பெய்தது-6

காரணமில்லாமல் வரும் காதலில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
1.அவள் அழகாக இருக்கிறாள்
2.குழந்தை தனமான பேச்சு
3.நல்ல பொண்ணு
இத்தனை காரணம் போதாதா காதல் வருவதற்ககு?மணிசங்கருக்கு காதல் வந்தது.

காதலில் வெற்றி பெறுவதெற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன அதை மதித்து நடந்தாலே போதும் பாதி கிணறு தாண்டின மாதிரி.அவனும் அவற்றை மதித்தான்.

முதல்ல ரொம்ப ஃப்ரண்ட்லியா பழகனும்.அப்புறம் ரொம்ப கேர் எடுத்துக்கனும்.இத்தனை வருஷம் அப்பா அம்மா காட்டின பாசத்த ஆறு மாசத்துல நம்ம முறியடிக்கனும்.ஆனா அதுக்கு அவசியம் இல்ல ஏன்னா அவ அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க அதுனால அவங்க கூட அவளுக்கு அட்டாச்மென்ட் கம்மி தான்.இப்படி எத்தனயோ பேரு முயற்சி பண்ணி வெற்றி பெற்ற பாதையில் அவனும் பயணிக்க தொடங்கினான்.

இத்தனை வருடங்களாக அன்புக்கு ஏங்கிய மனது.மூன்றே மாதத்தில் அவளே காதலை வெளிப்படுத்தினாள். நேரம் காலம் கூடி வருகிறது.அவன் ஆனந்த கூத்தாடினான். எது நடந்தாலும் ஒரு காரணத்தோட தான் நடக்குங்ற அவனோட மனப்போக்கை அவள் மாற்றினாள்.அவளோடு இருக்கும் தருணங்கள் அவனுக்கே அவனை புதிதாய் அறிமுகப்படுத்தின.

இந்த நிமிஷம் அவளை நான் நெனைச்சிட்டு இருக்கேன்னு அவளுக்கு தெரியுமா?நானா இதெல்லாம் யோசிக்கிறேன்? இதெல்லாம் தான் இப்போ அவன் அடிக்கடி அவனா யோசிச்சு பாத்து அவனா சிரிச்சுக்குற விஷயங்கள்.காதலை புரிய வைத்ததால் ஹரிதாவுக்கு நன்றி ஹரிதாவை தந்ததால் காதலுக்கு நன்றி.
அவனோட ப்ராஜக்ட் மானேஜர் ரவிக்குமாரை மட்டும் அவன் வாழ்க்கையில் இருந்து தனியாக எடுத்து வைத்து விட்டு பார்த்தால் இது தான் சொர்க்கம்னு கூட அவன் சொல்லிடுவான்.எல்லாம் கூடி வர்ர மாதிரி இந்த ஆளும் எங்கயாவது போயிட மாட்டானான்னு அவனுக்கு ஒரு நப்பாசை.

ஹரிதா முன்னாடி அந்த ஆள் கிட்ட திட்டு வாங்க அவனுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது ஆனாஅவ இதெல்லாம் கண்டுக்கிற ரகம் இல்லை தான். நேரம் வரட்டும் இந்த ஆளுக்கு முதல்ல ஆப்பு வைக்கனும்.கழுதைக்கு வாக்கப்பட்டா பொதி சுமந்து தான் ஆகனுங்றது எவ்வளவு சரியா இருக்கு?
அடுத்த நாள் அலுவலகத்துக்கு போனவனுக்கு இன்ப அதிர்ச்சி.ப்ராஜக்ட் விஷயங்களை வேற ஒரு ஏஜன்ட் கிட்ட விற்க போயி கையும் களவுமா மாட்டிகிட்டார் ரவிக்குமார்.இந்த சந்தோஷத்தை பகிர்ந்துக்க ஹரிதா இல்லை.அவ சொந்த ஊருக்கு போயிருக்கா.நிஜமாகவே தனது அதிர்ஷ்டத்தை நினைத்து வியந்து கொண்டான்.புது மானேஜர் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்தார்.அரை மணி நேரத்தில் ஊழியர்கள் அனைவரையும் கான்பெரன்ஸ் ஹாலுக்கு அழைத்தார்.தனது அதிர்ஷ்டத்தின் மேல் மொத்த பாரத்தையும் போட்டு விட்டு மணிசங்கரும் அறைக்குள் நுழைந்தான்.அங்கே
புது மானேஜர் தாமோதரன் உட்கார்ந்திருந்தார்.

அவன் மண்டைக்குள் ஒரு குரல் கேட்டது"எல்லாத்துக்கும் நேரம் காலம் கூடி வரனும்".