Saturday, May 21, 2011

பற்றும் வரவும் காதல்!

பற்றில் இதயம் வைத்தேன்
வரவில் வலியை வைத்தேன்
உறவில் உன்னை வைத்தேன்
உயிரில் காதல் வைத்தேன்!

இரவில் கனவுகள் சுமந்தேன்
பகலில் நினைவுகள் சுமந்தேன்
இரண்டிலும் உன்னை சுமந்தேன்!

நிலவுக்கு எட்டி குதித்தேன்
வானை எட்டவுமில்லை
பூமி கிட்டவுமில்லை
காதலின் உலகத்தில் நான் திரிசங்கானேன்!