Monday, June 22, 2009

அன்று மழை பெய்தது-4

திட்டத்தின் இரண்டாவது கட்டம்.இப்போ தான் ஜாக்கிரதையா இருக்கனும்.

ஹலோ நான் ஹரிதா

பெண் குரலில் பேசிப்பார்த்து கொண்டான்.ரெண்டு நிமிஷம் பொண்ணு மாதிரி பேசனும்.அடுத்து ஹரிதாவோட அண்ணன் மாதிரி பேசி அவனை மிரட்டி விட்டுடனும்.கண்களை மூடி சிகரட்டை இழுத்தான்.புகையை ஊதிய படி அக்செப்ட் (accept) பட்டனை அழுத்தினான்.

ஹரிதா:ஹலோ
தாமோ:ஹலோ ஹரிதா நான் தாமோ பேசறேன்
ஹரிதா:சொல்லுங்க தாமோ

ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு முறை சிகரட்டை இழுத்து கொண்டான் மணிசங்கர்.

தாமோ:என்ன பண்ணிடு இருக்க?
ஹரிதா:படம் பாத்துட்டு இருக்கேன்
தாமோ:என்ன படம்?
ஹரிதா:யாரடி நீ மோகினி?
தாமோ:அய்யோ எனக்கும் ரொம்ப பிடிக்கும்
ஹரிதா:நான் அப்புறம் கூப்பிடுறேன்.யாரோ வர்ர மாதிரி இருக்கு.வீட்ல யாரச்சும் பாத்தா நான் அவ்ளோ தான்
தாமோ:ஹேய் ஹேய்

ம்ம்.இது தான் நேரம்.ஹரிதாவோட அண்ணனை உள்ளே கொண்டு வந்திட வேண்டியது தான்.

ஹரிதா:அண்ணா

தாமோ:நான்

மணிசங்கர்:இனி போனை கையில தொட்ட வெட்டிருவேன்.என்ன திமிரு டீ உனக்கு.

ஹரிதா:அண்ணா

மனிசங்கர்:யாரு டீ அவன்?சொல்லு அவனை பொளந்துட்டு வந்து உன்னை பாத்துக்றேன்.

எதிர் முனையில் போன் கட் ஆனது.

கண்களை மூடி பெரு மூச்சு விட்டான் மணிசங்கர்.கையில் சிகரெட் சுட்டது.மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்.ஹரிதாவின் ஆர்க்குட் அக்கௌன்டை திறந்தான்.சொல்லாமல் கொள்ளாமல் தாமோதரன் அவளது நன்பர்கள் குழுவில் இருந்து ஓடி போயிருந்தான்.இவ்ளோ பயம் இருக்க இவனெல்லாம் ஏன் தான் கடலை போட ஆசை படுறானோ என்று நினைது கொண்டே அப்பாவிற்க்கு போன் செய்தான்.

இரண்டு மாதங்கள் கழித்து(வெயில் காலம்)...........

நேரம் காலம் கூடி வரும்னு சொல்றது எவ்ளோ பெரிய உண்மைனு அப்போ தான் மணிசங்கருக்கு புரிந்தது.ஒரு வேளை வேலையெ கிடைக்காம போயிடுமோனு அவன் பயப்பட ஆரம்பிச்ச காலகட்டம் அது.அவனே எதிர்பார்க்காமல் தான் அந்த வேலை அவனுக்கு கிடைத்தது.பெரிய ஐ.டி கம்பெனி.முதல் இரண்டு மாதம் ட்ரெயினிங்.மாதம் இருபதாயிரம் சம்பளம்.ச்ச உனக்கு வந்த வாழ்வை பாரு டா மணிசங்கர்.அவனை அவனே மெச்சி கொண்டான்.

ரிஷஷன்(recession) லே ஆப் அது இதுனு என் வேலைய புடிங்கிடாத கடவுளே.எனக்கு வேலை கொடுக்க இன்னொரு மாங்கா மண்டயன் கிடைக்க மாட்டான்.கடவுளை வேண்டிக்கொண்டே முதல் நாள் அலுவலகத்துக்கு சென்றான் மணிசங்கர்.அவனுடன் சேர்த்து மொத்தம் 60 பேர் தேர்ந்தெடுக்கபட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் செமினார் ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர்.அங்கு தான் அவர்களுக்கு வகுப்பு.மணிசங்கர் மும்மரமாக செல்லில் கேம் ஆடிக்கொண்டிருந்தான்.அவன் பக்கத்தில் யாரோ உட்காருவது தெரிந்தது. மெதுவாக தலையை திருப்பினான்.பக்கதில் ஒரு பெண்.அதுவும் பிப்பா.அவள் கை நீட்டினாள்.

பெண்:ஹாய்

இவளை எங்கயோ பாத்திருக்கொமே

மணிசங்கர்:ஹாய்
பெண்:நான் ஹரிதா.ஹரிதா ராமச்சந்திரன்

அதற்க்குள்அறைக்குள் அவர்களது மேலதிகாரி நுழைய எல்லோரும் எழுந்தார்கள்.வியர்வையை துடைத்தபடி மணிசங்கரும் எழுந்தான்.


4 comments:

Anonymous said...

superb karthi.nee kathai eluthuvanu theriyum.analum ivalavu intresting aga irukum nu ninaika villa.waiting for ur next post......

Unknown said...

k priya.thank u.thodarnthu padi

experiencing... said...

hey nice...continue the next part soon :P

Unknown said...

ஹா ஹா ..... நல்லா இருக்கு ..... :) :) :) என்னிக்கு மாட்ட போறியோ :P :P :ப அப்டின்னு நினைச்சேன் .... அதே மாதிரி மாடிட்ட...... இன்ட்ட்றேஷ்டிங்.,....... :) :) :)