Wednesday, July 22, 2009

அன்று மழை பெய்தது-8

ஹரிதாவை பத்தி நினைக்குற நேரத்த விட தாமோதரனை பத்தி நினைக்குற நேரம் தான் அவனுக்கு அதிகமா தெரிஞ்சது. காதல் பேசி அழைத்தது. பேச்சுவாக்கில் ஹரிதாவிடம் கேட்டான்.

புது மானேஜர் எப்படி?
பரவாயில்ல

இன்னும் பையன் வேலைய ஆரம்பிக்கல போல என நினைத்துக்கொண்டான்.

சரி ஷாப்பிங் போனும்னு சொன்ன?எத்தன மணிக்கு?
நீ தான் வரலைனு சொல்லிட்டல்ல.அப்புறம் என்ன?
சும்மா தான்.என்ன திடீர் ஷாப்பிங்?
அடுத்த வாரம் எனக்கு பிறந்த நாள் வருது.அதான் ட்ரெஸ் எடுக்க போறேன்.
சரி.எங்க போற?
ஸ்பென்சர்.லேட் ஆகுது.நான் போயிட்டு வந்து கூப்பிடுறேன்.பை.
பை

ஒரு வழியாக அவள் ஷாப்பிங் முடித்த போது மணி 9.30 ஆகிவிட்டிருந்த்து.
உடலில் சோர்வு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தாள்.சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகலாமா இல்லை வீட்டுக்கு போய் சாப்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தபோது தான் அவனை கண்டாள்.கையில் யுனிவெர்செல் கவர்.
அவனை பார்த்ததும் அவளுக்கு கோபம் தான் வந்தது.அவன் எண்ணை மொபைலில் அழுத்தினாள்.

ஹலோ
எங்க டா இருக்க?
என்ன மரியாதை குறையுது?நான் வெளிய இருக்கேன்.
நானும் அதே வெளிய தான் இருக்கேன்.ரைட்ல திரும்பி பாரு.

அசடு வழிந்த படி திரும்பினான் மணிசங்கர்.

இங்க என்ன பண்ற?ஸ்பென்சர் தானே போறேன்னு சொன்ன?
என் கூட ஷாப்பிங் வர மாட்டேன்னு சொல்லிட்டு சிட்டி சென்டர்ல உனக்கு என்ன வேலை?
போலியாய் முகத்தில் கோபம் காட்டினாள் அவள்.அவள் எத்தனை அழகு என அப்போது தான் அவன் முழுதாய் உணர்ந்தான்.
சும்மா தான் வந்தேன்.
மொபைல் புதுசா?குடு பாப்போம்
இது ரொம்ப வேண்டியவங்களுக்கான பிறந்த நாள் பரிசு.வேற யார் கிட்டவும் காட்ட முடியாது.
அது சரி.
அவள் சட்டென சிரித்தாள் அவன் அதில் தொலைந்தான்.

ஹேய் அங்க பாரு நம்ம புது மானேஜர்

சட்டென அவன் முகம் கறுத்தது

எங்க?
அதோ பழமுதிர்ச்சோலைல பாரு
சரி வா நாம கிளம்புவோம்.மணி 10 ஆச்சு
சரி.

ஹரிதாவுடன் கை கோர்த்த படி நடக்க ஆரம்பித்தான் மணிசங்கர்.பத்தடி நடந்திருப்பான்.திடீரென திரும்பி தாமோதரன் பக்கம் திரும்பினான்.தாமோதரன் ஹரிதாவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அது வரை கண்களில் இருந்த காமம் மணிசங்கர் பக்கம் திரும்பியதும் வெறியாக மாறியது.மணிசங்கர் அவள் கைகளை அழுத்திப்பிடித்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை.தாமோதரனின் முகம் தான் நிழலாடிக்கொண்டிருந்தது.மறுநாள் அலுவலகம் நுழைந்ததும் தாமோதரனால் அழைக்கப்பட்டான்

குட் மார்னிங் மிஸ்டர் மணிசங்கர்
குட் மார்னிங் சார்
உங்களை ஹெட் ஆபிஸ்க்கு மாத்தலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.அடுத்த மாசத்துல இருந்து உங்களுக்கு 3,000 இன்க்ரிமென்ட்.கங்கிராட்ஸ்

கை குலுக்க நீட்டினான் தாமோதரன்

தேங்க் யூ சார்

தயக்கத்துடன் கைகுலுக்கி விட்டு கிளம்பினான் .அறைக்கதவை திறக்கும் போது அவனை தாமோதரன் கூப்பிட்டான்.

மணிசங்கர்
என்ன சார்?
அப்படியே போகும் போது ஹரிதாவை வரச்சொல்ல முடியுமா?

மணிசங்கருக்கு சுள்ளென்று ஏறியது அப்படியே தாமோதரன் பக்கம் திரும்பினான்.

எதுக்கு சார்?

இருவரும் ஒருவரை ஒருவர் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அறைக்கதவை யாரோ தட்டுவது போல இருந்தது.இருவரும் திரும்பினார்கள்.

எக்ஸ்க்யூஸ் மீ

ஹரிதா எட்டிப்பார்த்தாள்.