Tuesday, August 4, 2009

அன்று மழை பெய்தது -10

ஹலோ சார்.என்ன இந்த பக்கம்?
உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் மணிசங்கர்
சொல்லுங்க சார்
ஹரிதா என் ஆளு இனி என் விஷயத்துல தலையிடாதிங்க

மணிசங்கருக்கு சுர்ரென்று இருந்தது.

ஒழுங்கா ஓடிப்போயிடு மானெஜர் மயிறுனெல்லாம் பாக்கமாட்டேன் கொன்னேபோடுவேன்.
தப்பு பண்ற மணிசங்கர்.இதுக்கு வருத்தப்படுவ.
பொத்திட்டு போடா

மணிசங்கரை முறைத்துக்கொண்டே காரை எடுத்தான் தாமோதரன்.மணிசங்கருக்கு கோபத்தில் கை நடுங்கியது. நடுக்கத்துடன் சிகரெட்டை பற்ற வைத்தான்.அவனால் நம்பவே முடியவில்லை.அவன் வீட்டு வாசலில் வைத்தே அவன் காதலியை மறக்கும் படி அவனை மிரட்டி விட்டு செல்கிறான்.இதற்கு மேல் ஹரிதாவிடம் மறைத்து புண்ணியமில்லை.அவளுக்கு போன் செய்தான்.போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருப்பதாக தகவல் வந்தது.எரிச்சல் மேலும் அதிகமாகியது.டாஸ்மாக்கை நோக்கி வண்டியை விட்டான்.எல்லாம் வாங்கி விட்டு வீடு திரும்பிய போது மணி பத்தரை தொட்டிருந்தது.தனியே தண்ணியடிப்பதை இன்று வரை வரை சொர்க்கமென நினைத்தான் ஆனால் இன்று அதுவே அவனுக்கு நரகமாய் தெரிந்தது.அந்த மழை பெய்த இரவை மீண்டும் நினைத்துப்பார்த்தான்.இப்படியெல்லாம் கூட நடக்குமா?இத தான் விதினு சொல்லுவாங்களோ?பதில் வரும் முன் வாந்தி வந்தது.இன்று வழக்கத்தை விட போதை மிகவும் அதிகமாயிருந்தது. தட்டு தடுமாறி சென்று வாந்தி எடுத்தான்.வாந்தி சிவப்பாக இருந்தது.வயிறு எரியத்தொடங்கியது.தரையில் உட்கார்ந்தான்.போதை தெளிவது போல இருந்தது.மொபைல் சினுங்கியது.ஹரிதா தான்.பேச முயற்சித்தான்.ஆனால் நாக்கு குழறியது.

ஆம்புலன்ஸ் ஹரிதா வீடு ரத்தம்

போன் கட் ஆனது.தாமோதரன் பில்லி சூனியம் வைச்சிட்டான்.நினைவுகளும் பாதியில் கட் ஆக கண்களை மூடினான் மணிசங்கர்.
கண்களை திறந்த போது சுற்றிலும் வெள்ளையாக இருந்தது.சொர்க்கமாக இருக்கும் என்ற நினைப்பு தோன்றியது ஆனால் அவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற நினைப்பு எழவே சுற்றிப்பார்க்க முயற்சித்தான்.வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல நின்றுகொண்டிருந்தாள் ஹரிதா.இரவு முழுவதும் கண் உறங்கவில்லை என்பது அவளை பார்த்தாலே புரிந்தது.கேவலமாக திட்ட போகிறாள் என எதிர் பார்த்தான்.ஆனால் அவள் திட்டவில்லை.மெதுவாக அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

இனி குடிக்காத.ப்ளீஸ்.

அவனுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.அவளது கைகளை பற்றினான்.

மாட்டேன்.

மெலிதாய் சிரித்தாள் அவள்.

உங்க வீட்டுக்கு சொல்லிட்டேன்.
என்ன சொன்ன?
நீ டூப்ளிக்கெட் சாராயம் குடிச்சிட்டு ரத்த வாந்தி எடுத்தன்னு சொன்னேன்.

அவன் முழித்தான்.

முழிக்காத.புட் பாய்ஸனிங்க்னு சொல்லிருக்கேன்.உங்க அம்மா காலையிலேயே வந்திட்டாங்க. கேன்டீன் வரை போயிருக்காங்க.
நீ யாருனு கேட்டாங்களா?
ஃப்ரென்ட்னு சொல்லிருக்கேன்.
உண்மையவே சொல்லிருக்கலாம்.
சொல்றேன் சொல்றேன்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது அம்மா அறைக்குள் நுழைந்தாள்.

சரி.நான் போயிட்டு வர்றேன்.ஆபிஸ்க்கு லேட் ஆயிடுச்சு.

அவனது அம்மாவிடமும் சொல்லிவிட்டு ஹரிதா கிளம்பினாள்.அவள் சென்றதும் தான் முந்தின இரவை பற்றிய நினைவுக்கு வந்தது.
அம்மா வந்து அவன் தலையை வருடிக்கொடுத்தாள்.உறக்கம் கண்ணைத்தொட்டது.அன்று பெரும்பாலும் உறக்கத்தில் கரைந்தது.
சாயங்காலம் ஹரிதா வந்தாள்.அம்மாவுக்கு அனேகமாக விஷயம் புரிந்திருக்க வேண்டும்.ஹரிதாவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவளே வெளியே சென்று விட்டாள்.

எப்படி இருக்க?
பரவாயில்ல.இன்னிக்கு வேலை எப்படி இருந்தது?
நீ சொன்னது இப்போ தான் கொஞ்சம் புரியுது
என்ன சொன்னேன்?
தாமோதரன்.
ஏன் எதுவும் தொல்லை குடுத்தானா?
இல்லை.ஒருத்தன் பார்வைய வைச்சே அவன் மனசுல என்ன ஓடுதுனு பொண்ணுங்களால கண்டுபிடிச்சுற முடியும்.

அவன் முந்தின இரவு நடந்தவற்றை அவளுக்கு விவரித்தான்.

நீ வேலைய விட்டுடு ஹரிதா.நானும் ட்ரான்ஸ்பர ஏத்துக்கிறேன்.அடுத்த வாரத்துல எங்க அப்பா அம்மா உங்க வீட்டுக்கு கல்யாணம் பேச வருவாங்க.உங்க வீட்ல எதுவும் பிரச்சனை இல்லையே?
எனக்கு ஓகேனா ஒரு பிரச்சனையும் இல்ல
ஏன் நீங்க என்ன சொல்ல போறிங்க?

அவள் கையை பற்றினான்.மொபைல் நழுவி கீழே விழுந்தது.

அய்யோ
ஒன்னும் இல்ல.மொபைல் எப்படி இருக்கு?
சூப்பர்
குடு பாப்போம்
நீ தான வாங்கி குடுத்த.நீயே பாக்கலியா?
குடு பாப்போம்
இந்தா.நீ பாத்திட்டு இரு.நான் போயி அத்தைய பாத்திட்டு வர்றேன்.
இப்போவே மாமியாரும் மருமகளும் கூட்டு சேர்ந்திட்டீங்களா?
போடா

அவள் மீண்டும் திரும்பிய போது அவன் உறங்கிக்கொண்டிருந்தான். மொபைலை எடுத்துக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவள் சென்றாள்.அவனால் ஆஸ்பத்திரியில் இருக்க முடியவில்லை.எப்போது தான் வெளியே விடுவார்கள் என ஆகிவிட்டது. ஹரிதாவுக்கும் தனக்கும் கல்யாணம் என்று சொல்லும் போது தாமோதரன் எப்படி முழிப்பான் என யோசித்துப்பார்த்தான். சிரிப்பு வந்தது. மருத்துவமனையில் அவன் போரடிப்பதாக சொல்லவே மறுநாள் ஹரிதா தனது லேப்டாப்பை கொண்டுவந்து கொடுத்தாள்.இரண்டு நாட்களில் அவனை டிஸ்சார்ஜ் செய்தார்கள்.அம்மாவும் ஊருக்கு கிளம்பினாள்.அவளை ரெயில் ஏற்றிவிட்டு வீடு திரும்பும் போது ஒம்பது மணி ஆகியிருந்தது.தாமோதரனுக்கு கூப்பிட்டான்.

ஹலோ சார்
நல்லா இருக்கீங்களா மணிசங்கர்?
ரொம்ப நல்லா இருக்கேன் சார்.நான் ட்ரான்ஸ்பர் எடுத்துக்குறேன் சார்.எப்போ அங்க ஜாய்ன் பண்ணனும்?
அடுத்த வாரம்
தேங்க் யூ சார்
நான் சொன்ன இன்னொரு விஷயத்த பத்தி யோசிச்சு பாத்தீங்களா?
முடிவே பண்ணிட்டேன் . நாளைக்கு காலையில நீங்களே தெரிஞ்சுகுவீங்க.
சரி மணிசங்கர்.பை

போன் கட் ஆனது.மணிசங்கர் ஹரிதாவின் மொபைலுக்கு அழைத்தான்.

எப்படி இருக்க டா?
நல்லா இருக்கேன்.
மாத்திரையெல்லாம் சாப்பிட்டாச்சா?
ஆச்சு.
அத்தை ஊருக்கு கிளம்பிட்டாங்களா?
கிளம்பியாச்சு.
அப்புறம் சொல்லு
உனக்கு ஒரு கதை சொல்றேன் ஹரிதா.
இத்தனை நாளா கவிதை சொல்லி கொடுமைபடுத்தின.இப்போ கதையா? ஏண்டா?
இது உனக்கு புடிக்கும்
அப்படியா?சரி.கதை பேரு என்ன?
அன்று மழை பெய்தது