Wednesday, July 3, 2013

மன்னிப்பாயா??

நீர்த்துப்போன போராட்டங்களும்
நிம்மதி கெடுக்கும் உன் நித்திரைகளும்
மறந்தும் மரத்தும் போன எங்களின் மானங்கெட்ட மனங்களை
மரணமும் தின்னாதோ?

பி.கு:
தினமும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆயிரம் ஆயிரம் பெண்களுக்கும், செய்தி ஆக்கி அவர்களை விற்கும் செய்தி நிறுவனங்களுக்கும்,அதை படித்து விட்டு ஐந்து நிமிடங்களில் மறந்து போகும் என்னை போன்ற சுய நலவாதிகளுக்கும் இந்த கவிதை அர்ப்பணம்